ஆங்கில மொழிக்கு பதிலாக ஹிந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் – அமித்ஷா

ஆங்கில மொழியை பயன்படுத்துவதற்கு மாற்றாகவே ஹிந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் எனவும், மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல எனவும்  உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் 37 ஆவது நாடாளுமன்ற அலுவல்கள் மொழிகள் தொடர்பான கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டு ஒருமைப்பாட்டின் ஒரு அங்கமாகக் கருத வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், இந்தியவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும்போது உள்நாட்டு பொது மொழிகளில் தான் பேச வேண்டும் எனக் கருதுவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை மத்திய அமைச்சரவையின் 70 சதவீத கோப்புகள் ஹிந்தியில் தான் தயாராகி வருவதாகவும், கூறியுள்ள அவர், 10 ஆம் வகுப்பு வரை ஹிந்தி பாடத்தை கட்டாயமாக்க வட கிழக்கு மாநிலங்கள் ஒப்புக் கொண்டிருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *