ஐ.பி.எல்.: டி கொக்கின் அபார துடுப்பாட்டத்தால் லக்னொவ் அணி சிறப்பான வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 15ஆவது லீக் போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரித்வீ ஷா 61 ஓட்டங்களையும் ரிஷப் பந்த் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் கிருஸ்ணப்பா கௌதம் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் வெற்றி இலக்கை கடந்தது. இதனால், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குயிண்டன் டி கொக் 80 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் லலித் யாதவ் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 52 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 9 பவுண்ரிகள் அடங்களாக 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குயிண்டன் டி கொக் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *