பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பு, ஏப் 08

நாடாளுமன்றத்திற்கு அருகில் பல்கலை மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராகவும் களனி பல்கலைக்கழக மாணவர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

நாடாளுமன்றத்திற்கு அருகில் பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *