யாழ்ப்பாணம், ஏப் 8
யாழ்.மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்ட நிலையில் மானிப்பாய் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.
மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது மதியம் மின்னல் தாக்கியதால் வீடானது பகுதியளவில் சேதமாகியுள்ளது.
எனினும் இந்த அனர்த்தத்தினால் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


