உங்களுக்கும் அண்ணன்கள், தங்கைகள் இருக்கிறார்கள்! பொலிஸாருக்கு ரோஜா பரிசளித்த யுவதி

பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

பாராளுமன்ற வீதித்தடையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு இளம் பெண் ஒருவர் சிவப்பு ரோஜா ஒன்றை பரிசளித்துள்ளார்.

ரோஜாவை ஒரு போலீஸ் அதிகாரியிடம் கொடுத்த குறித்த யுவதி,

“உங்களுக்கும் அண்ணன்கள்.. தங்கைகள்.. இருக்கிறார்கள். அதற்கு இந்த ரோஜாவை எடுத்துக் கொள்ளுங்கள், ”என்றாள்.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நீர்த்தாக்குதல் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *