
லண்டன், ஏப் 09
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள விவகாரத்தில் புடின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. புடின் மற்றும் ரஷ்யாவின் முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் மேலை நாடுகள் விதித்து வருகின்றன.
அந்த வகையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள்கள் மீது பிரிட்டன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதாவது, புடினின் இரண்டு மகள்களான கதேரினா டிகோனோவா மற்றும் மரியா வொரோன்ட்சொவா ஆகியோருக்கு எதிராக பயணம் செய்ய தடை, அவர்களின் சொத்துக்களை முடக்குதல் போன்ற நடவடிக்கைகள் அடங்கிய பொருளாதர தடைகளை பிரிட்டன் விதித்துள்ளது.
அதேபோல், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லவ்ரோவ் மகளுக்கு எதிராகவும் இத்தகைய தடையை பிரிட்டன் விதித்துள்ளது. இது குறித்து பிரிட்டன் கூறுகையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிப்ரவரி 24 ஆம் திகதி முதல் தற்போது வரை 1,200 ரஷ்யர்கள் மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புடைய 16 வங்கிகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.