ஐ.பி.எல்.: சுப்மான் கில்லின் அதிரடியால் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

மும்பையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் டைடன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லிவிங்ஸ்டன் 64 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 35 ஓட்டங்ளையும் பெற்றுக்கொண்டனர்.

குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், ரஷித்கான் 3 விக்கெட்டுகளையும் தர்ஷன் நால்கன்டே 2 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி, ஹர்திக் பாண்ட்யா மற்றும் லொக்கி பெர்குசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அந்த அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 96 ஓட்டங்களையும் சாய் சுதர்சன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், ரபாடா 2 விக்கெட்டுகளையும் ராகுல் சஹார் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 59 பந்துகளில் 1 சிக்ஸர் 11 பவுண்ரிகள் அடங்களாக 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சுப்மான் கில் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *