இஸ்ரேலில் அதிகரித்துவரும் தாக்குதல்கள்: அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் சிறப்பு அதிகாரம்!

இஸ்ரேலில் தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தடுக்கும் முயற்சியில், இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தலி பென்னட், அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் முழு சுதந்திரம் வழங்கியுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) பாலஸ்தீனியர் ஒருவர் நெரிசலான டெல் அவிவ் பொழுதுபோக்கு பகுதியில் மூன்று பேரைக் கொன்றது மற்றும் 16பேர் காயத்திற்கு வழிவகுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தலி பென்னட் கூறுகையில், ‘இந்தப் போருக்கு வரம்புகள் இல்லை மற்றும் இருக்காது.

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக நாங்கள் இராணுவம், ஷின் பெட் (உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனம்) மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் முழு சுதந்திரத்தை வழங்குகிறோம்’ என கூறினார்.

இரவு முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், நெரிசலான மதுபானசாலைகள் மற்றும் உணவகங்களின் வீதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய பாலஸ்தீனிய துப்பாக்கிதாரியை தாங்கள் சுட்டுக் கொன்றதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 35 வயதான பாரக் லுஃபான், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டெல் அவிவ் மருத்துவமனை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த மற்ற இருவரும் இரண்டு பேர், 28வயதான டோமர் மொராட் மற்றும் 27 வயதான எய்டம் மாகினி என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

பழைய நகரமான யாஃபா, 1948ஆம் ஆண்டு, இனரீதியாக சுத்திகரிக்கப்பட்டு இன்று சிறுபான்மை பாலஸ்தீனியர்களின் தாயகமாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *