
விடுதலைப் புலிகளுக்கு ஏவுகணைகளை வழங்க முயற்சித்த ஜப்பானிய பாதாள உலகத் தலைவர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த வகையில் அவருடன் சேர்த்து மூன்று தாய்லாந்து நபர்களையும் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்குறிப்பிடப்பட்ட மூவரும் நியூயோர்க்கில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு தானியங்கி ஆயுதங்கள், ரொக்கெட்டுகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தரையிலிருந்து வான்நோக்கி தாக்கக்கூடிய ஏவுகணைகளை இவர்கள் வழங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நியூயோர்க்கில் கைது செய்யப்பட்ட குறித்த நான்கு பேரும் அமெரிக்காவிற்குள் எப்படி நுழைந்தனர் என்பதை அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் விளக்கவில்லை என்ற விடயம் குறிப்பிடத்தக்கது.