காலி முகத்திடலில் மூடப்பட்டுள்ள சில பகுதிகள்

காலி முகத்திடலில் இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அங்கு நிர்மாணப் பணிகளை முன்னிட்டு சில பகுதிகள் மூடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஒரு பகுதி மாத்திரம் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் போராட்டத்திற்காக மக்கள் பலர் பேருந்துகளில் வரும் நிலையில் அப்பகுதிக்கு மக்கள் தொடர்ந்து வருகை தந்த வண்ணம் இருப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அரசிற்கு எதிராக போராட்டம் மேற்கொள்ளும் வகையில் அரசாங்கத்திற்கும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கும் எதிராக வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் மக்கள் காலி முகத்திடல் நோக்கி படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *