மிரிஹான சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண உதவுங்கள்! பொலிசார் கோரிக்கை

மிரிஹான போராட்டத்தில் பஸ்ஸுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ளனர்

கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி மிரிஹான பிரதேசத்தில் இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்து, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபரின் ஓவியம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட ஓவியத்தை ஒத்ததாக இருக்கும் நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புகள் ;

விசாரணைக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் – 071-8591755
டிஜிட்டல் தடயவியல் பிரிவு – 071-8594929
CID – 011-2444265

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *