
கொழும்பு, ஏப் 09
தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினரால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ரணில் விக்ரமசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பல ஐரோப்பிய இராஜதந்திர தலைவர்களை சந்தித்து, தற்போது நிலவும் பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது இடைக்கால அரசாங்கத்தின் தேவை மற்றும் அதன் பதவிக்காலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.