நுவரெலியாவில் கோட்டாவுக்கு எதிராக போராட்டம்

நுவரெலியா, ஏப் 09

நுவரெலியாவில் வர்த்தக நிலையங்களில் தொழில் புரியும் இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (09) நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “கோ ஹோம் கோட்டா” , “கோட்டாபயவே வெளியேறு”, “குடும்ப ஆட்சி வேண்டாம்” போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சில வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *