
நுவரெலியா, ஏப் 09
நுவரெலியாவில் வர்த்தக நிலையங்களில் தொழில் புரியும் இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (09) நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “கோ ஹோம் கோட்டா” , “கோட்டாபயவே வெளியேறு”, “குடும்ப ஆட்சி வேண்டாம்” போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சில வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.