
கொழும்பு, ஏப் 9
ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டுள்ளமை காரணமாக தற்போது அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இளைஞர்கள் யுவதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி சனிக்கிழமை காலை முதல் காலி முகத்திடலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்களும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.