மழைக்கு மத்தியிலும் எரிவாயுவுக்காக மக்கள் போராட்டம்

திருகோணமலை, ஏப் 9

திருகோணமலை அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால், பிரதான வீதியை இடைமறித்து சிலர் எரிவாயுவை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சனிக்கிழமை காலை 6 மணிமுதல் எரிவாயு வழங்கப்படும் என எரிவாயு விற்பனை நிலைய உரிமையாளர் கூறியதை அடுத்து, பொதுமக்கள் நீண்ட வரிசையில் எரிவாயுவுக்காக காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும், மாலை நேரம் வரையில் எரிவாயு கிடைக்காமையால், தங்களுக்கு எரிவாயு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொள்கலன்களை வீதியின் குறுக்காக வைத்து, மழைக்கு மத்தியிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *