எரிவாயு வழங்குமாறு கோரி பிரதான வீதியை மறித்து திருமலையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

எரிவாயுவை வழங்குமாறு கோரி, திருகோணமலை அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால், பிரதான வீதியை இடைமறித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணிமுதல் எரிவாயு வழங்கப்படும் என எரிவாயு விற்பனை நிலைய உரிமையாளர் கூறியதை அடுத்து, பொதுமக்கள் நீண்ட வரிசையில் எரிவாயுவுக்காக காத்திருப்பதாக தெரியவருகின்றது.

மாலை நேரம் வரையில் எரிவாயு கிடைக்காமையால், தங்களுக்கு எரிவாயு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொள்கலன்களை வீதியின் குறுக்காக வைத்து, மழைக்கு மத்தியிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *