பல்லாயிரக்கணக்கான மக்கள் காலி முகத்திடலில் பெரும் போராட்டம்

கொழும்பு, ஏப் 9

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வரும் நிலையில் மக்கள் பல இடங்களிலும் அரசாங்கத்துக்கு எதிரான கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் போராட்டத்தின் உச்சம் கொழும்பு காலி முகத்திடலில் பல்லாயிரக்கணக்காண மக்கள் அணி திரண்டு போராட்டத்தை தற்பொழுது முன்னெடுத்து வருகின்றனர் என எமது செய்திப்பிரிவு தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் முதல் காலி முகத்திடல் பகுதியிலும், ஜனாதிபதி காரியாலயத்திற்கு அருகில் போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திலும், தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *