பல இடங்களிலும் மழை பெய்யும் சாத்தியம்

கொழும்பு, ஏப் 9

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

வடக்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தப் பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும், எனவும், ஏனைய சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் பல நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் நீர்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பிரதான நீர்தேக்கங்களின் நீர்மட்டம் 67 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் டீ அபேசிறிவர்தன இதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *