சிறுதுளி நீர்தான் பெருங்கடலை உருவாக்குகிறது; மகிந்த தேசப்பிரிய மீண்டும் வலியுறுத்து.

நாட்டின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளராக பதவிவகித்த மஹிந்த தேசப்பிரிய இன்று தனது முகப்புத்தகப் பதிவில் ‘அடம்பன் கொடிகள்”திரண்டால் மிடுக்கு’ என்றவாறாக பதிவினை இட்டுள்ளார்.

இதேவேளை சற்றுமுன் மீண்டும்’ சிறுதுளி நீர்தான் பெருங்கடலை உருவாக்குகிறது’ என்றவாறு தற்போது ஜனாதிபதி செயலக முன்றலில் நடைபெற்று வரும் போராட்டத்தின் படத்தினையும் இட்டவாறாக பதிவு அமைந்துள்ளது.

இதேவேளை முன்னாள் தேர்தல்கள் ஆணையாளரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக குறித்த பதிவு அமைவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *