இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில், புலம்பெயர் வாழ் இலங்கையர்கள் தமது நாட்டின் நிலமை தொடர்பில் பெரும் கவலை கொண்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள இரு சிறு சகோதர்கள் இலங்கை மக்களின் நிலை குறித்து பெரிதும் கவலையடைந்ததுடன், தங்களால் இயன்ற உதவிகளை செய்துள்ளதாக முகநூல் வாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவில், எங்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பின் காரணமாக நாங்கள் இருவரும் ஃபுட் சிட்டிக்கு சென்று இந்த பிஸ்கட் ஸ்டாக்கை சேகரித்தோம். ஆனால் இந்த சகோதரர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.
எனினும் இலங்கையில் தொடரும் மாபெரும் போராட்டத்திற்கு ஆதரவாக, போராட்டத்திற்கு வரும் ஆயிரக்கணக்கானோருக்கு நிவாரணம் வழங்க ஓரிரு ரொக்கங்களை அனுப்பி வைத்தனர். அதேவேளை அவுஸ்திரேலியாவில் இருந்தாலும் மனதளவில் அவர்கள் இலங்கையர்களாக உள்ளனர் என பதிவிட்டுளார்.
இந்நிலையில் சிறுவர்களாக இருந்தாலும் தமது தாய்நாட்டில் மக்கள் படும் துன்பங்களை பார்க்க சகிக்காது உதவ முன்வந்த சிறுவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.

