கிண்ணியாவில் வீடு தீப்பிடித்து முற்றாக நாசம்!

கிண்ணியா – ஆலங்கேணியில் இன்று இரவு ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக வீடு தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

கிண்ணியா – ஆலங்கேணி, வள்ளுவர் வீதியில் அமைந்துள்ள வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

திருமணம் முடிந்து நான்கு நாட்களான புதுமணத் தம்பதியினர் தமது வீட்டை விட்டு, மாமியார் வீடான மட்டக்களப்புக்குச் சென்றுள்ள இவ்வீட்டில் யாரும் இருக்கவில்லை. அச்சமயமே வீடு எரிந்துள்ளது.

பக்கத்து வீட்டுக்காரர் அனைவரும் ஒன்றிணைந்தே தண்ணீர் அடித்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

திருமணத்துக்கு வாடகைக்கு எடுத்த தளபாடங்கள், பிளாஸ்டிக் கதிரைகள், மின்சார உபகரணங்கள், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் என்பன எரிந்துள்ளதாகவும் தெரியவருகிறது

மின்சார ஒழுக்கு ஏற்பட்டு வீடு எரிந்த வேளையில், இலங்கை மின்சார சபை கிண்ணியா அலுவலகத்துக்கும் , கிண்ணியா பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பெறுமதிமிக்க பொருட்கள் அழிந்துவிட்டது. அரசாங்கம் நஷ்டயீடு வழங்க வேண்டும் என வீட்டு உரிமையாளர்கள் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *