
ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவாரானால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு ஆதரவளிக்கலாம் என அந்தக் கட்சியின் உப செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.