
ஜோர்தானில் உள்ள இலங்கையர்கள், இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
குறித்த உபகரணங்கள் ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இந்த நன்கொடையை ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளரார் சன்ன ஜயசுமனவிடம் கையளித்தார்.
ஜோர்தானுக்கான இலங்கைத் தூதுவர் ஷானிகா திஸாநாயக்க மற்றும் அம்மானில் உள்ள இலங்கைத் தூதரக ஊழியர்கள் நன்கொடையை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.