
மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
புத்தாண்டு காலப்பகுதியில் மரக்கறிகளின் விலைகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடுமையாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் மரக்கறிகளுக்கான கேள்வி குறைவடைந்ததையடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக சங்கத் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதேவேளை,கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் தனது கடைக்கு வருகை தந்த வாடிக்கையாளர்களுக்கு சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மரக்கறிகளை நுகர்வோருக்கு இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுகர்வோரின் வருகையில் பாரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.