பதவியிலிருந்து ஜனாதிபதியை போகச் சொல்வது தீர்வு அல்ல: எஸ்.பி. திஸாநாயக்க

கொழும்பு, ஏப் 10

பதவியிலிருந்து ஜனாதிபதியை போகச் சொல்வது தீர்வு ஆகாது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அரசுக்கான ஆதரவை 40 பேர் விலக்கிக்கொண்டிருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு ஆதரவாக 117 ஆசனங்கள் உள்ளன. அதேபோல சுயாதீனமாக செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளவர்கள் சஜித் அணிக்கு சார்பாக வாக்களிக்கமாட்டார்கள். எனவே, அரசின் இருப்புக்கு அச்சுறுத்தல் இல்லை.

தொடர்ச்சியாக 8 மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும்போது, எனக்கே அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது.

மக்களின் கோபம் நியாயமானதே. அதற்காக மன்னிப்பு கோருகின்றோம். இந்நிலைமையில் இருந்து மீள நாம் ஒன்றுபட வேண்டும். ஜனாதிபதியை போ சொல்வது தீர்வு அல்ல என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *