
கொழும்பு, ஏப் 10
புத்தாண்டு காலப்பகுதியில் மரக்கறிகளின் விலைகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடுமையாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் மரக்கறிகளுக்கான கேள்வி குறைவடைந்ததையடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக சங்கத் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மேலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுகர்வோரின் வருகையில் பாரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறினார்.