நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி – இம்ரான் கான் பதவி நீக்கம்

பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக, இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், இம்ரான்கானின் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

ஜனாதிபதியின் உத்தரவை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்வு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

அத்தோடு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, நேற்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடியது. எனினும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தாமல் சபாநாயகர் தாமதம் செய்து வந்தார்.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது யாரும் எதிர்பாராத விதமாக நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆசாத் குவைசர் மற்றும் துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதில் இம்ரான்கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்ததையடுத்து, இம்ரான்கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *