
கொழும்பு, ஏப் 10
அரசாங்கத்தினால் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு திங்கள்,செவ்வாய்க்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி அறிவித்துள்ளார்.
இதேவேளை, வங்கிச் சேவைகள் விடுமுறை நாட்களில் இயங்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
எனினும், மக்களின் வசதி கருதி இந்த தினங்களில் வங்கிகள் வழமை போன்று செயற்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை விடுமுறை அறிவிக்கப்பட்டதையடுத்து அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை கொண்டு நடத்துவதற்கு தடையாக அமையக்கூடாது என்றும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி மேலும் அறிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.