கொட்டும் மழையிலும் அடங்காத போராட்ட வெறி

கொழும்பு, ஏப் 10

காலி முகத்திடலுக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது.

ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக சனிக்கிழமை காலை முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் காலி முகத்திடலுக்கு அருகாமையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தி, ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *