நாடாளுமன்றம் ஊடாக காய்நகர்தலை மேற்கொள்ளும் ரணில்! – வெளியான தகவல்

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறுவது தொடர்பில் நாடாளுமன்றம் ஊடாக அதிகாரம் வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு முழு நிதி அதிகாரம் உள்ளதால் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் மூன்று பிரதிநிதிகளுக்கும் முழு அதிகாரங்களும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரமும் வழங்குவோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்களுக்கு ஆதரவளிப்பதற்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கும் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் கூடுவோம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை முக்கியமானது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடம் இருந்து கூடுதல் கடன்களை பெறுவதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை எடுத்துக் கொண்டு தேவையான முடிவுகளை எடுப்போம். அமைச்சரவையை நியமித்தால், நிதிக் குழுவின் அதிகாரங்களை அதிகரித்து நாடாளுமன்றத்திற்கு வந்து முடிவெடுப்பதற்கு உதவுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *