நீர்த்தேக்க நீர்மட்டம் உயர்வு: இராஜாங்கனையின் 6 வான்கதவுகள் திறப்பு

இராஜாங்கனை, ஏப் 10

கடந்த சில தினங்களாக பெய்த மழையைத் தொடர்ந்து முக்கிய நீர்த்தேக்கங்கள் பலவற்றில் நீர் மட்டம் 66 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் டி. அபேசிரிவர்தன் இதுதொடர்பாக தெரிவிக்கையில் தற்போதைய நீர் எதிர்வரும் சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்கு போதுமானதாக இருக்கும் என்றார்.

இதேவேளை, தொடரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *