அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை: வளிமண்டள திணைக்களம் விடுத்த அறிவிப்பு

கொழும்பு, ஏப் 10

வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சி முல்லைத்தீவுக்கு கிழக்கே 300 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகள் கனமழையை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

இம்மழை இடி மின்னலுடன் கூடிய மழையாக இருக்கும் என்பதனால் மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *