இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்த முக்கிய கப்பல்

3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை கொண்ட சரக்குக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அவற்றை இறக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் தலைவர் தெஷார ஜயசிங்க நேற்று முற்பகல் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை 7.00 மணியளவில் எரிவாயு இறக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

“காஸ் சிலிண்டர் நிரப்பும் செயல்முறை தற்போது நடந்து வருகிறது.நாள் ஒன்றுக்கு சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகப்படும் ,” என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *