
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேர தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது இடம் பெற்று வரும் நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, பிவித்துருஹெல உருமய மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசாங்கத்தை பிரிதித்துவப்படுத்தும் கட்சிகளின் 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக கடந்த 5 ஆம் திகதி அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திர கட்சியினர் தாம் சுயமாக இயங்கி வருவதாக அண்மையில் அறிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.