இந்தியாவில் ஒரே நாளில் 1,054 பேருக்கு கொரோனா 29 பேர் பலி

இந்தியா, ஏப் 10

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,054 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை அதன் வீழ்ச்சிப்பாதையில் உள்ளது. தினந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 1,109 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சனிக்கிழமை புதிதாக 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,054 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 54 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,35,271 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,21,685 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,258 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,02,454 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 11,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,85,70,71,655 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *