
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, யாழ் மாநகர சபையின் செயற்திட்டங்கள் தேக்க நிலையை அடைந்துள்ளதுள்ளதாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, யாழ் மாநகர சபையின் செயற்திட்டங்கள் தேக்கநிலையை அடைந்துள்ளதுள்ளன. குறிப்பாக யாழ் நகரில் உள்ள குளம் மற்றும் சுற்றுவட்டத்தை அழகுபடுத்துவதற்காக 40 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கட்டட பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக குறித்த வேலைத்திட்டத்தையும் உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று சங்கிலியன் பூங்கா அபிவிருத்தி, வைத்தியசாலை வீதி மற்றும் ஸ்ரான்லி வீதி அகலப்படுத்தல் போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டன. வைத்தியசாலை வீதியில் உள்ள வாய்க்கால்களை மூடி “பாக்கிங்” அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே குறித்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு தற்போதுள்ள நாட்டு நெருக்கடியில் இரண்டு மடங்கு தேவைப்படும். ஆகவே இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும்.- என்றார்.