கொட்டும் மழையிலும் போராட்டம்: மக்களுக்கு உதவி செய்யும் சமூக கொடையாளர்கள்

கொழும்பு, ஏப் 10

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து மக்கள் காலிமுகத்திடல், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

சனிக்கிழமை ஆரம்பமான போராட்டம் கொட்டும் மழையையும்  பொறுட்படுத்தாது  இளைஞர்கள் அங்கேயே நின்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காலிமுகத்திடல் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவருபவர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் சுமார் 500 மழைக் கவச ஆடைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு உலர் உணவுப் போதிலும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ள நிலையில், இப்தார் தொழுகை சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
அத்துடன் மதங்களை கடந்து வீதியில் இருந்து உணவை பகிர்ந்து உண்டுள்ளனர்.

அத்தோடு, பல்வேறு நலன்விரும்பிகளும் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *