
தமிழர் விடுதலைக் கூட்டணியில் தற்போது இரண்டு தலைவர்கள் உள்ளனர் என தலைவர் தம்பையா இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செயலாளர் நாயகம் என தெரிவித்துக் கொண்டு வீ. ஆனந்தசங்கரி, கூட்டத்தை கூட்டி, மத்தியசபைக் குழுவில் இல்லாத ஒருவரை தலைவர் ஆக்கியுள்ளார். இது கட்சி யாப்பு விதிகளுக்கு முரனானது.
இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்கவுள்ளோம். எம்மிடம் மாத்திய சபை உறுப்பினர்களின் விபரம் உள்ளது. அதிலே 7 பேர் மட்டுமே உறுப்பினர்கள். மிகுதி வீதியால் சென்றவர்களை அழைத்துக்கொண்டு வந்து இருந்தியுள்ளனர்.
பழைய நிர்வாகத்தில் உள்ள அனைவரும் எங்களுடன் உள்ளனர். நான் தான் தலைவர். என்னிடம் கேட்காமல் அவர் கூட்டத்தை கூட்ட முடியாது. வேறு வழி இல்லாமல் இந்த வேலையை பார்த்து, அவரே புதிய தலைவர் ஒருவரை இரகசிய கூட்டத்தில் தெரிவு செய்துள்ளார்.
செயலாளர் நாயகத்தை மீறி புதிய தலைவர் செயற்பட்டால், அவரும் அடித்து கலைக்கப்படுவார். முன்னர் இவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது என்றார்.