பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மடக்கிப்பிடிப்பு!

கொட்டாவ, ஏப் 10

கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் பொலிஸாரின் உத்தரவை மீறி சிறிய லொறி ஒன்று வெளியேறும் வாயிலை உடைத்துக்கொண்டு செல்வது, கொட்டாவ அதிவேக வீதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.

கடவத்தையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த லொறி பணம் செலுத்தாமல் வெளியேறும் வாயிலை உடைத்துக்கொண்டு சென்றுள்ளது.

இதேவேளை வாகனத்தை பறிமுதல் செய்ததோடு இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *