
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் முக்கியமான கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று முற்பகல் ஆளும் கட்சியின் கூட்டணியில் இருந்து விலகி சுயாதீனமான செயற்பட போவதாக அறிவித்த மைத்திரிபால சிறிசேன தரப்பினர், விமல் வீரவங்ச தரப்பினர், அனுர பிரியதர்ஷன யாப்பா தரப்பினர் இன்று எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன் போது இடைக்கால நிர்வாகம் தொடர்பான பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனிடையே ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகியவற்றை கொண்டு வருவது தொடர்பில் நாட்டிற்குள் உரையாடல்கள் ஏற்பட்டுள்ளன.
இவை தொடர்பாகவும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு முன்னர் நாடாளுமன்றத்திலும் இவர்கள் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.