
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு முப்படையினரின் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சிடம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
ஏற்பாடு செய்யும் போராட்டங்களை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.