கொட்டும் மழையிலும் விடாது தொடரும் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள்.

காலிமுகத்திடலில் நேற்று காலை முதல் ஆரம்பமான அரசுக்கெதிரான தன்னெழுச்சி ஆர்ப்பாட்டங்கள் தற்போது வரை தீவிரமாக தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது காலிமுகத்திடலின் பிரதான வீதிகளின் அருகிலும் ஜனாதிபதி செயலக த்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதுடன் குறித்த வீதியால் பயணிக்கும் வாகன சாரதிகளும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒலிகளை எழுப்பிவருகின்றனர்.

இதனிடையே ஆர்ப்பாட்டம் நடைபெறும் காலிமுகத்திடல் பகுதியில் நேற்று மாலை முதல் இடையிடையே கடும் மழை பெய்ததுடன் மழையினையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

தற்போது மப்பும்மந்தாரமுமான வானிலை காணப்பட்டுவருகின்ற போதும் மக்கள் குறித்த பகுதியை விட்டு வெளியேறாது தொடர்ந்தும் ‘கோட்டா கோ ஹோம்’ கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *