கோட்டாவிற்கு சூனியம் வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்! – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் கடும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், அரசுக்கெதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் கொழும்பு – காலி முகத்திடலில் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட அரசுக்கெதிரான போராட்டம் தற்போது வரை முடிவின்றி தொடர்ந்துவருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கோட்டாபய அரசு பதவி விலகவேண்டும் என கோரி சூனியம் வைக்கும் விதமாக சில செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *