கோட்டா அரசுக்கு எதிராக இரண்டாவது நாளாக காலி முகத்திடலில் இரவு பகல் பாராது மழைக்குள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் பலரும் உணவு, சிற்றுண்டி ,தேநீர் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இதே வேளை இன்று மதியம் மழைக் குளிருக்கு இதமாக,பாரம்பரிய உணவான கிழங்கும் சம்பலும் வழங்கப்பட்டுள்ளது.
இதனை பலரும் விரும்பி உண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

