தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் ஈ.சரவணபவனால் சிறுவர் பூங்கா திறந்துவைக்கப்பட்டது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனால் இன்று மாலை வலி தேன்மேற்கு பிரதேசத்தின் பண்டத்தரிப்பு பகுதியில் சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் தமிழர்களின் பாரம்பரிய இசைநிகழ்வுகளுடன் அழைத்துவரப்பட்டதோடு இதனைத்தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் நாடாவெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து
விருந்தினர்கள்,பொதுமக்கள், சிறுவர்கள் சிறுவர்பூங்காவை பார்வையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து கலைநிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.மேலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.இவ் சிறுவர் பூங்காவிற்கு காணியினை அன்பளிப்பாக சமாதான நீதிவான் கணபதிப்பிள்ளை கந்தசாமி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்,சமாதான நீதவான் கணபதிப்பிள்ளை கந்தசாமி,மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் கிறிஸ்தோபர் அன்ரன் மோகன்ராஸ்,பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி சுலோச்சனாமுருகநேசன் ,திருமதி மலர்விழி குணபாலன் அதிபர் யா பண்டத்தரிப்பு இந்து கல்லூரி,வலி தென்மேற்கு தவிசாளர் ஜெபனேசன்,வலிதேற்கு பிரதேச சபை தவிசாளர் தர்சன்,வலி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள்,வலி தென்மேற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *