புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் – வெளியான முக்கிய அறிவிப்பு.

கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று சந்தித்துள்ளார்.

“முக்கியமான விடயம் எதுவும் பேசப்படவில்லை” என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சந்திப்பின் பின்னர் தெரிவித்தார்.

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவை நிர்ப்பந்திப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *