முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்திய காலிமுகத்திடல்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவுகள்

அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதியை பதவி விலகக் கோரியும் இரண்டாவது நாளாக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் இணைந்து தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

“Go home gota” என்ற கோசத்துடன் குறித்த ஆர்ப்பாட்டம் எழுச்சி அடைந்து வருகிறது. மழை, வெய்யிலை பொருட்படுத்தாது இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்கிறது .
இந்த நிலையில் இன்று குறித்த களத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்கி உள்ளார்கள் . இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

இந்த நிலையில் குறித்த புகைப்படங்கள், இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் மக்கள் கூடாரம் அமைத்து தங்கியிருந்த நிலையை கண்முன் கொண்டு வருவதாக பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *