
கொழும்பு, ஏப்ரல் 11: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஆளும் கட்சியில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ள 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு, இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் நிறைவடைந்துள்ளது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார கூறுகையில் இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. எனினும், இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றார்.