வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்துவிட்டு திருட்டு

யாழ்ப்பாணம், ஏப் 11

வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 15 பவுண் நகை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

வீட்டிற்குள் இரு கொள்ளையர்கள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு
நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *