யாழில் இடம்பெற்ற கோரவிபத்து; தலைசிதறி பலியான இளைஞன்

யாழ். சத்திரசந்தியில் தாயும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதால் கோரவிபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

லொறியின் சில் சிறுவனின் தலையில் ஏறியதால் சிறுவன் சம்பவம் இடத்தில் உயிரிழந்துள்ளார் .

சம்பவ இடத்தில் ஒன்று கூடியவர்கள் லொறியின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

மேலும், லொறியை செலுத்தி வந்த சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *